மக்களவை தேர்தல் தேதியை கடந்த 16 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 7 கட்டமாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.  அருணாச்சல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 85 வயதுக்கும் மேற்பட்டோர் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான படிவம், வருகிற 20ஆம் தேதி முதல் வீடு வீடாக வழங்கப்பட இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான 12டி படிவம் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வீடு வீடாக விநியோகிக்கப்படவுள்ளது” என்றார்.