நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பொது மக்களுடன் திரை பிரபலங்களும் ஆர்வமுடன் வாக்களிக்கும் நிலையில் நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, “நான் யாருக்கு ஓட்டு போட்டேன்னு சொல்லனுமா? அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும், வாக்கை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார்.