நடிகர் சூரி இன்று மக்களவை தேர்தலில் வாக்களிக்க தனது மனைவியுடன் வந்திருந்தார். இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த முறை ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததென தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன் தயவு செய்து அனைவரும் 100% வாக்களியுங்கள் என பதிவிட்டுள்ளார்.