தான்சானியாவில் உள்ள ஜெய் டெகோர் (JAY Decor) என்ற கட்டுமான நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் எழுதிய ராஜினாமா கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்றைய இளைஞர்களுக்கு நிலையான வேலை என்பது ஒரு உயிர்நாடி என்றாலும், சில நேரங்களில் பணியிட சூழ்நிலைகள் அதனை சுமையாக மாற்றுகின்றன. இதேபோன்ற ஒரு சம்பவம் தான்சானியாவில் நடந்துள்ளது.

அந்நிறுவனத்தில் பணியாற்றிய ஏ.சி. மின்சா என்ற ஊழியர் தனது ராஜினாமா கடிதத்தில், “அன்புள்ள ஐயா, இந்த நிறுவனம் சம்பள உயர்வை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளது, சம்பளத்தை அல்ல. நான் வேலை செய்கிறேன், மந்திரத்தை அல்ல என்பதால் நான் ராஜினாமா செய்கிறேன்” என்று எழுதியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Lights & Interiors (@jay_decor_)

குறுகியதாக இருந்தாலும், அவரது கடிதம் கோபம், சோர்வு மற்றும் விரக்தியை வெளிப்படுத்துவதாக இணைய பயனர்கள் கூறுகின்றனர். உண்மையில் ஊழியர்கள் தகுதியான மதிப்பும் ஊக்கமும் பெறவில்லை என்ற நிலைமைக்கு இது ஒரு குரல் எனவும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். அந்தக் கடிதம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முத்திரையுடன் இருந்ததால், இது நகைச்சுவை அல்ல, உண்மையான ராஜினாமா என்பது உறுதியாகியுள்ளது.

பின்னர், ஜெய் டெகோர் நிறுவனம் தானாகவே அந்தக் கடிதத்தின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது. இதை பலரும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், இணையத்தில் பெரும்பாலானோர் ஊழியருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம், எந்த நிறுவனமும் அதன் ஊழியர்களுக்கு மரியாதை, மதிப்பு, மற்றும் நியாயமான சம்பளத்தை வழங்கினால்தான் செழிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. ஏ.சி. மின்சாவின் சுருக்கமான கடிதம் பல நிறுவனங்களுக்கும் ஒரு பாடமாக மாறியுள்ளது.