இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில் “சிலர் பணய கைதிகள் விடுவிக்கப்பட்டதும் இஸ்ரேல் போரை நிறுத்தி விடும் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன், இலக்கை எட்டும் வரை போரை தொடர்வோம்” என கூறியுள்ளார்.