ஆர்சிபி அணிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தாலும் இதுவரை ஒரு தடவை கூட கோப்பையை வென்றதே கிடையாது. கடந்த 17 ஆண்டுகளில்  இதுவரை 9 முறை பிளே ஆப் வாய்ப்பை பெற்றுள்ள RCB  அணி மூன்று முறை இறுதிப்போட்டியில் விளையாடியும் தோல்வியை தான் சந்தித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு வருடமும் விராட் கோலி தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார் . ஆனால் ஒவ்வொரு வருடமும் விராட் கோலி தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார் . 3 முறை ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

இப்படி ஒவ்வொரு முறையின் RCB அணியின் கோப்பை கனவு தகர்ந்து போகும் நிலையில் தினேஷ் கார்த்திக் ஓய்வாய் அறிவித்தது ரசிகர்களுக்கு மேலும் ஷாக் கொடுத்தது. இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் விராட் கோலி குறித்து நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார். அதில் நான் எப்பொழுதுமே விராட் கோலியின் அபிமானி. நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்று பேசியுள்ளார்.