விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல் ஒன்று தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் குடும்ப பிரச்சினைகளை அப்படியே அழகாக காட்டி வருகிறது. இதில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் கோபி. இவருக்கு இந்த சீரியலில் இரண்டு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து பிரச்சனைகளை கோபி சமாளிக்க கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி கோபி தற்போது குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடப்பதால் அவரை நம்மால் ராதிகாவை விட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இவ்வாறு சீரியல் சென்று கொண்டிருக்க மறுப்பாக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோபி என்ற சதீஷ் விலங்குகள் குறித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது வீட்டில் நாம் பாசமாக வளர்க்கும் நாய்கள் நோய் வாய் பட்ட பின்னர் அவைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் விடுவது தவறு. ஒரு நாயை வளர்த்தால் அதற்கு அம்மா அப்பா நாம் தான்,அதனால் நாய்களுக்கு ஏதாவது நோய் வந்தால் அதற்கு உரிய மருத்துவம் வழங்க வேண்டும் என அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். மேலும் இது போன்ற நாய்களுக்கு உணவளித்து அதனை வீடியோவாக பதிவேற்றும் போது என்னை பார்த்து காரி துப்புவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://youtu.be/GyBeka3a6rk