நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம்தான் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்நிலையில் ‘ருத்ரன்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் லாரன்ஸ் 150 குழந்தைகள் தத்தெடுத்துள்ளார்.

இது தொடர்பான போட்டோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், கஷ்டத்தில் இருக்கும் 150 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு கல்வி வழங்க உள்ளேன். இந்த புதிய முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதம் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். லாரன்ஸ் பொதுவாக கஷ்டப்படும் ஏழைகளுக்கு தொடந்து உதவி வருவதை ஒரு கடமையாக செய்து வருகிறார்.