மியான்மரில் உள்ள ராக்கைன்  மாநிலத்தை விட்டு ரோஹிங்கியா அகதிகள் வெளியேறி வருகின்றனர். அவர்கள் படகு மூலம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சென்றடைய முயற்சித்தனர். இந்நிலையில் மலேசியா நோக்கி சென்ற படகு ஒன்றில் 50க்கும் அதிகமான அகதிகள் பயணித்த நிலையில் திடீரென படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் இதுவரை 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எட்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் உயிருடன் மீட்கப்பட்டவர்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள அழைத்துச் சென்றுள்ளனர்.