சம்யுக்தா கிஷான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினர் பிப்ரவரி 16ஆம் தேதி இன்று நாடு தழுவிய பந்த் நடத்தப் போவதாக அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் சில தமிழக விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. விருப்பப்படும் வணிகர்கள் மட்டுமே இதில் பங்கேற்க இருப்பதால் வணிகத்திலும் பாதிப்பு இருக்காது. அதனைப் போலவே பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் இதனால் மூடப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.