Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

இந்நிலையில் RBI  மூலமாக வெளியிடப்படும் மத்திய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனையானது  போஸ்ட் ஆபீசில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம் தேதி(இன்று) வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்பதோடு  தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும். இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6263 ஆகும்.  மேலும் இதுகுறித்த  விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம்.