புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம் மற்றும் கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய பிஸ்கட் மற்றும் மிட்டாய்கள் வழங்கப்படும். வாரத்தில் இரண்டு நாட்கள் வழங்கப்பட்ட முட்டை இனி மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.