நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 13.9 லட்சம் அங்கன்வாடி மையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.

இதில் தமிழகத்தில் மட்டும் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 44,628 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது