பெட்ரோல், டீசல் விலை பல நாட்களாக மாற்றமின்றி உள்ள நிலையில், விலை குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை விரைவில் குறையும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உலகில் எங்கிருந்து மலிவு விலையில் எண்ணெய் கிடைக்கிறதோ, அங்குதான் வாங்குவோம். விரைவில் மலிவு விலையில் பெட்ரோல் கிடைக்கும் என்றார்.

சென்னையில்  ஒரு லிட்டர்பெட்ரோல்  எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் எந்த மாற்றமுமின்றி ரூ. 94.24க்கு  விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 265 நாட்களாக எந்த மாற்றமுமின்றி நிலையாக விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.