நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. டி.ஆர் பாலு தலைமையிலான திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்குழு உடன் மார்க்சிஸ்ட் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. சம்பத், பெ. சண்முகம், க.கனகராஜ், என்.குணசேகரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  திமுக சார்பில் டி.ஆர் பாலு, ஆ.ராசா, பொன்முடி பெரியசாமி, கே. என் நேரு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.