நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை முன்னிறுத்தி வாக்கு சேகரிக்க உள்ளோம் என்று கூறினார்.

சமீபத்தில் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சென்னை வருகை தந்திருந்தார். மேலும் அதிமுக மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இடையே அவ்வபோது வார்த்தை போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் என கட்சி பிரமுகர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.