நாட்டில் நடக்கும் மிக முக்கியமான நாட்களில் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் டெல்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய சஷ்டி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அந்த நாளில் உலர் நாளாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருவிழாவை ஒட்டி டெல்லி முழுவதும் உள்ள மது கடைகள் மூடப்படுவதாக டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. கிழக்கு உத்தர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் சூரியனை வழிபடும் ஒரு முக்கிய திருவிழா தான் சாத் தினமாகும்.