அண்மைக்காலமாக பல வங்கிகளும் அதிக அளவில் தனிநபர் கடன் வழங்குவதால் வாரா கடன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனிநபர் கடனுக்கு கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தற்போது விதித்துள்ளது. அதன்படி தனிநபர் கடன்களுக்கான ரிஸ்க் வெயிட் அளவீட்டை 100 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தி உள்ளது. கிரெடிட் கார்டு களுக்கான கடன் ரிஸ்க் அளவீட்டை வங்கிகளுக்கு 150 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.