தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக அறிவித்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக கலக்கி வருபவர் தான் நடிகர் சந்தானம்.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிகை நயன்தாரா பற்றி பேசியுள்ளார். அதில் நயன்தாராவை தனக்கு வல்லவன் திரைப்படத்திலிருந்து நன்றாக தெரியும் எனவும் அதன் பிறகு நிறைய திரைப்படங்களில் இணைந்து நடித்ததாகவும் கூறினார். மேலும் நயன்தாரா எப்போதும் என்னை அண்ணா என்று தான் அழைப்பார். நானும் அவரை என் தங்கச்சி என்று சொல்லுவேன். தற்போது அவர்களுக்கு குழந்தை பிறந்த நேரத்தில் அவரின் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டேன். குழந்தைகளை என்னிடம் காட்டும் போது நயன்தாரா என்னை மாமா என்றுதான் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது நான் கூறினேன் குழந்தைகளுக்கு காதுகுத்து ஃபங்ஷன் நடத்தும் போது என் மடியில வச்சு தான் காது குத்தனும் என்று நக்கலாக கூறினேன். அப்படி எதுவும் நடந்தால் தாய்மாமன் சீர் எல்லாம் செய்வேன் என்று சந்தானம் கூறியுள்ளார்.