நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆனார்கள். வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டனர். இந்த விஷயம் பெரும் பேசு பொருளாக சர்ச்சையை கிளப்பியது. இது ஒருபுறம் இருக்க இவர்கள் தங்கள் குழந்தைகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சந்தானம், விக்னேஷ் சிவன் – நயன்தாரா குறித்து பேசி உள்ள விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் வல்லவன் படத்தில் இருந்து நயன்தாரா எனக்கு பழக்கம். என்னை அண்ணன் என்று சொல்லித்தான் கூப்பிடுவார்கள். நானும் தங்கச்சி தான் கூப்பிடுவேன். நான் அவங்க வீட்டிற்கு போகும் பொழுது பயங்கரமான சாப்பாடு ரெடி பண்ணி இருந்தாங்க. நான் போனப்ப ரெண்டு குழந்தைங்க கிட்ட மாமா வந்து இருக்காங்க பாருங்கன்னு சொன்னாங்க. நானும் என்னம்மா என் மடியில் வைத்து தான் காது குத்துவியான்னு கேட்டேன். சினிமா துறையில் உள்ள தங்கச்சி அவங்க தாய்மாமன் சீரெல்லாம் செய்யணும் என்று கலகலப்பாக பேசியிருக்கிறார் சந்தானம் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.