நடிகை சமந்தா தற்போது சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். ஏனெனில் அவர் மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது ஓரளவிற்கு குணமாகியுள்ளார். இதனையடுத்து முழுமையாக ஓய்வெடுக்க சினிமாவில் இருந்தே பிரேக் அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா பிரபல ஹீரோவிடம் ரூ.25 கோடி கடன் வாங்கியதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிகிச்சைக்கு செலவு அதிகம் என்பதால் சமந்தா கடன் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மயோசிடிஸ் நோய் ஏற்பட உறுதியான காரணம் என்ன என்பது குறித்து விஞ்ஞானிகளால் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.