தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் திரைத்துறையில் நுழைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

500 கோடி ரூபாய் வசூலிக்கும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அந்த திரைப்படத்தில் நான் நடிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனன் மாஸ்டர்,. பேட்ட, மாறன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.