சமீபத்தில் பேட்டி ஒன்றில், பத்திரிக்கையாளரின் ரஜினி குறித்த கேள்விக்கு இயக்குனர் பா ரஞ்சித் ஏளனமாக சிரிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பேட்டியில், கபாலி படத்தில் நடிக்கும் போது அந்த கதையை சரியாக புரிந்து கொண்டு ரஜினி நடித்தாரா என பத்திரிக்கையாளர் கேட்க, அதற்குப் பா ரஞ்சித் சிரித்து பதில் ஏதும் கூறாமல் மலுப்புகிறார். இதற்கு ரஜினி ரசிகர்கள் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எக்ஸ் வலைத்தளத்தில், நன்றி கெட்ட ரஞ்சித் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.