அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், செப்டம்பர் 16-ஆம் தேதி, சார்லட்டில் இருந்து லாஸ் வேகாஸ் செல்லும் விமானத்தில், கேடி என்ற 47 வயது பெண் திடீரென கோபமடைந்து கத்தினார்.
அவர் விமான பணியாளர்களை மிரட்டி, ஒருவரை காலால் உதைத்து கீழே தள்ளினார். மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால், பயணிகளும் பணியாளர்களும் சேர்ந்து அவரை டேப் கொண்டு கட்டினர்
அவர், சிறு வயதில் தன் தந்தையை விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாகவும், விஷம் பயன்படுத்துவது பற்றி பேசினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
A passenger was taped to her seat for ‘attacking crew’ pic.twitter.com/VP1ZqC3H1n
— The Sun (@TheSun) September 29, 2025
விமானம் லாஸ் வேகாஸில் இறங்கியதும், FBI அதிகாரிகள் கேடியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது பணியாளர்களை தாக்கிய குற்றச்சாட்டு உள்ளது, இதற்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம்.
இந்த வீடியோவைப் பார்த்து, சிலர் இப்படிப்பட்ட ஆபத்தான நபரை விமானத்தில் அனுமதித்தது எப்படி என்று கேள்வி எழுப்பினர். மற்றவர்கள் இது பயமுறுத்தும் சம்பவம் என்று கூறினர். இந்த சம்பவம், விமான பயணங்களில் பாதுகாப்பு முக்கியம் என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளது.
