தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, ஆம்பள, அரண்மனை, மான்கராத்தே, பாலு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஹன்சிகா

இந்நிலையில் முன்னணி நாயகி ஹன்சிகா, “தெலுங்கில் ஒரு முன்னணி ஹீரோ தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்” என்று கூறியதாக வலைதளத்தில் தகவல் பரவியது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஹன்சிகா. ட்வீட் செய்த அவர், “நான் இதுபோன்ற கருத்தை எங்கும் சொல்லவில்லை. உண்மைக்கு மாறான தகவலை வெளியிட வேண்டும். உண்மையா என விசாரித்து செய்தி வெளியிடுங்கள்” என்றுள்ளார்