இந்தி சினிமாவில் சாராபாய் vs சாராயாபாய் எனும் தொலைக்காட்சி தொடர் வாயிலாக பிரபலமானவர் வைபவி உபத்யா(30). இவர் தீபிகா படுகோன் உடன் இணைந்து “சபக்” என்ற படத்திலும் நடித்து உள்ளார். இவர் தன் வருங்கால கணவர் ஜெய் காந்தியுடன் காரில் இமாச்சலப்பிரதேசத்திலுள்ள குலுமணாலிக்கு சென்று உள்ளார்.

இந்நிலையில் பஞ்சர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் திரும்பிய போது எதிர்பாராத வகையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த நடிகை வைபவி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதற்கிடையில் வைபவியுடன் காரில் சென்ற அவரது வருங்கால கணவர் ஜெய் காந்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வைபவியின் இறப்பு பாலிவுட் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.