விஜய் கட்சி தொடங்குவது ஒரு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணன் மட்டும் தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருப்போம் என விஜய் நினைப்பார். நல்ல ஆட்சி, நல்ல அரசை உருவாக்க வேண்டும்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 20 ஆண்கள், 20 பெண்கள் பிள்ளைகளை நிறுத்துகிறேன். விஜய் அரசியல் கட்சி தொடங்குவது என்பது ஒரு ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்  என கூறியுள்ளார்.