மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக விஜயகாந்துக்கு 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்து அவரை கௌரவித்துள்ளது.

இந்நிலையில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி செலுத்தினார். இதன் பின் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு விஜயகாந்த மீது தனிப்பட்ட அன்பு உண்டு என்றார். மக்களுக்கு முன்னுதாரணமான தலைவராக திகழ்ந்தார் என்றும் காவல்துறைக்கு எடுத்துக்காட்டாக நடித்தவர் எனவும் புகழ்ந்தார். மேலும், விஜயகாந்த் சேவையை போற்றும் வகையிலேயே அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டதாகவும் கூறினார்