தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் தானியங்கி பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான மறு கலந்தாய்வு பிப்ரவரி மூன்றாம் தேதி மற்றும் நான்கு ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கின் கீழ் வெளியிடப்பட்ட இறுதி அணையின் அடிப்படையில் முன்னர் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியல் மற்றும் அந்த தரவரிசை பட்டியலின் அடிப்படையில் தெளிவு ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய மறு கலந்தாய்வில் பங்கேற்பதற்கான குறிப்பாணை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தனியாக தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என்றும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் எனவும் திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலின் அடிப்படையில் மறு கலந்தாய்வில் கலந்துகொள்ள தவறும் போது மறு வாய்ப்பு வழங்கப்படாது எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.