நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இன்று மாலை 3 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் குழு உறுப்பினர்களுடன் காங்கிரஸ் தேர்தல் குழு நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்த கூட்டத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து உறுதி செய்யப்படும் எனவும் 12 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ள நிலையில் 5 அல்லது எட்டு தொகுதிகள் வரை வழங்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் பல கட்சிகள் முரண்பட்டு உள்ள நிலையில் காங்கிரஸின் எதிர்பார்ப்பு தமிழகத்தில் பலிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.