தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை திரிஷா காஷ்மீரில் படப்பிடிப்புக்காக கலந்து கொண்ட போது திடீரென சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார். இதனால் த்ரிஷா படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் மீண்டும் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு கிளம்பி சென்று விட்டார். நடிகை திரிஷா குளிரின் காரணமாகத்தான் காஷ்மீரில் இருந்து சென்னைக்கு சென்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் லியோ படத்தின் சூட்டிங்கில் இருந்து திரிஷா கிளம்பி சென்றதற்கான காரணம் குளிர் மட்டும் இல்லை விஜயின் குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பும் தான் என்று தற்போது மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். அதாவது சமீபத்தில் விஜயின் குடும்பத்தில் ஏதோ ஒரு சலசலப்பு ஏற்பட்டதாகவும் அதற்கு காரணம் திரிஷா என்பது போல் செய்திகள் வந்ததாகவும் மூத்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார். இதன் காரணமாகத்தான் திரிஷா படப்பிடிப்பிலிருந்து கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களில் உண்மை இல்லை என படக்குழு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் இந்த தகவல் தற்போது வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.