மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் சற்று கவர்ச்சி காட்டியும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனுபமா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் புதருக்குள் நின்ற படி போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது.