தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினி மற்றும் ஜெயலலிதாவுக்கு இடையே மனஸ்தாபம் இருந்ததாகவும் அதனால் நானே அவருக்கு எதிராக பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் ரஜினி கூறியிருக்கிறார். இந்நிலையில் நடிகர் ரஜினி நடித்த பில்லா படத்தில் முதலில் ஜெயலலிதாவைத்தான் படக்குழு நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் அந்த சமயத்தில் ஜெயலலிதா அரசியலில் கவனம் செலுத்தி வந்ததால் பில்லா படத்தில் நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவுக்கு மார்க்கெட் சரிந்ததாகவும் பட வாய்ப்புகள் குறைந்ததாகவும் சர்ச்சைகள் எழுந்த நிலையில் தனக்கு பில்லா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.