சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற வேண்டுவதாக திரைப்பிரபலங்கள் பலர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது நலமாக உள்ளதாக அவரது மனைவி ஷாலினி x பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அவருக்கு, மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, அந்த கட்டி அகற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுரைக்கு பின் இன்று வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.