மதுரை மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று முன்தினம் செல்வி தனது கணவரிடம் தனக்கு சொந்தமான நகையை கேட்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது ராஜா செல்வியின் தலையில் உலக்கையால் தாக்கி கொலை செய்ய முயன்றார். இதனால் காயமடைந்த செல்வியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.