நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சூரக்காடு தோப்பு தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் தனது உறவினரான எட்டாம் வகுப்பு மாணவன் ஹரி பிரசாத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். ஹரி பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.