சென்னை அணியில் தோனிக்கு எதிராகப் பேசுபவர் தீபக் சாஹர் மட்டுமே, அதனால் அவரை மட்டும்தான் தோனி வம்புக்கிழுப்பதாக சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பதி ராயுடு பேட்டியளித்துள்ளார்.

தீபக் சாஹரை சீண்டிய தோனி :

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.இந்த ஆண்டு தொடரின் முழுப் போட்டிகளும் ரசிகர்ளுக்கு விருந்தாக இருந்தது. அதுமட்டுமல்ல  தோனி மற்றும் தீபக் சாஹர் இடையேயான களத்தில் நடந்த கேலிக்கூத்து உட்பட அனைத்துமே ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

பேட் செய்ய வெளிவருவதற்கு முன் தீபக் சாகரை மட்டையால் அடிக்கப்போன தோனி, டாஸ் முடிந்து ஓய்வு அறைக்குத் திரும்பும் போது தீபக் சாகரை அடிக்க தோனி கை நீட்டினார், அதே போல் சென்னை அணி கோப்பையை வென்ற பிறகு தோனியிடம் ஆட்டோகிராப் கேட்டபோது தீபக் சாகரின் ஆட்டோகிராப் கொடுக்க மறுத்தார். மேலும் கைக்கு வரும் கேட்சை எடுக்க முடியாத உங்களுக்கு ஆட்டோகிராப் கொடுக்க மாட்டேன் என்று கூறிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

தோனியின் அட்டகாசத்தின் பின்னணி :

இந்நிலையில், தீபக் சாஹரை மட்டும் தோனி சீண்டுவதற்கு என்ன காரணம் என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பதி ராயுடு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.அதில், சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர் மட்டுமே தோனியின் பேச்சுக்கு எதிராகப் பேசுகிறார், அதனால்தான் தோனி தீபக் சாஹரை அடிக்கடி திட்டி வருகிறார். தீபக் சாஹர் தனக்கு கிரிக்கெட் பற்றி எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார், அதனால் ஓய்வறையில் தோனி ஏதாவது சொன்னால், தீபக் சாஹர் மட்டும் உடன்படமாட்டார். ஆனால் தீபக் சாஹர் இப்படி பேசுவது தோனிக்கும் பிடிக்கும், தோனிக்கு அவர் மீது அதிக அன்பு உள்ளது, தீபக் சாஹருக்கு தோனி அண்ணன் போன்றவர், அதனால் அவரை தொடர்ந்து கிண்டல் செய்வதாக கூறியுள்ளார்.