மத்திய மாநில அரசுகள் மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதுவாக (தொழில்) உடற்பயிற்சி கூடம் தொடங்க தமிழக அரசு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது.

நிதியுதவி அளிப்பதுடன், தனியார் நிறுவன உதவியுடன் பயிற்சியும் வழங்குகிறது. இதற்கு கட்டணமும் வசூலிப்பதில்லை. இந்த தொகையை பெற 18 – 40 வயதுடையவர்கள் தகுதியான சான்றிதழ்களுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்