மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பேருந்துகளில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக சென்னை மாநகாட்சி பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவதை தடுக்க படிக்கட்டுகளின் முன், பின் ஜன்னல்களில் நிரந்தமாக கண்ணாடி தடுப்புகள் பொருத்தம்படும் என்றும் விரைவில் இந்நடைமுறை அனைத்து மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.