ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாவக்காட்டு பாளையத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுவாதி தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சுவாதியும் கட்டிட தொழிலாளியான அன்பழகன் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நேற்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இரு வீட்டு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அன்பழகனின் பெற்றோருடன் புதுமணத் தம்பதியினரை அனுப்பி வைத்தனர்.