நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. வருகிற 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி வரை இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்வதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள்.

எனவே வேளாங்கண்ணிக்கு சென்று வருவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திண்டுக்கல் மண்டலம் சார்பில் திண்டுக்கல், வேளாங்கண்ணி இடையே 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் வருகிற 28-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் இயங்கும். பயணிகளின் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், இதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.