திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன பள்ளப்பட்டியில் இருக்கும் ஏழுமலை கண்மாயில் தேசிய உலக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நடந்து கொண்டிருக்கிறது. நேற்று 147 பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ பிறந்து வந்து தேனீக்கள் தொழிலாளர்களை விரட்டி விரட்டி கொட்டியது.

இதனால் 50 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.