சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தொழிலதிபரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான கிருஷ்ணகுமார் என்பவர் நிலம் வாங்கி தருவதாக கூறி 35 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி நிலத்தை வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி தராமல் கிருஷ்ணகுமார் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான கிருஷ்ண குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.