சமூக வலைத்தளங்களில் இன்று தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் எப்போதுமே குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் பாசமாகவே இருக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் குழந்தை ஒன்றரை தொட்டிலில் கதறி அழுது கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்த பூனை செய்வதறியாது உடனே உள்ளே சென்றவுடன் சமாதானப்படுத்தி உள்ளது. குழந்தையும் பூனையை கண்டதும் தன்னுடைய அழுகையை நிறுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.