இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. ஐந்து அறிவு படைத்த இந்த விலங்குகள் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்போது நம்மால் முடிக்கவில்லையே என்று வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றுகிறது.

அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் வீட்டின் பின்புறம் பூனை ஒன்று அமர்ந்து கொண்டிருக்கிறது. அப்போது அந்தப் பக்கமாக சென்ற காகம் வந்து அமர்ந்து கத்துகிறது. இதனைப் பார்த்த அந்த பூனை மியாவ் மியாவ் என அதற்கு தெரிந்த மொழியில் காகத்திற்கு பதில் கூறுகின்றது. இந்த வீடியோவை பார்க்கும் போது மனிதர்கள் இருவரும் பேசிக்கொள்வது போலவே இருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.