குஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வரைச் சேர்ந்த அதுல் கிரி என்ற நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த மருத்துவர் பாதிக்கப்பட்டவருக்கு சரியாக பரிசோதனை செய்யாமல் மாத்திரைகளை கொடுத்து அனுப்பியுள்ளார். படிப்படியாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வயிற்று வலியால் அவதிப்படுவதாக மருத்துவர்களிடம் கூறியபோது, அவரை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, ​​வயிற்றில் கத்தி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.