கேரளாவின் கொச்சியில் கிறிஸ்தவ தேவாலய கூட்டு நிகழ்ச்சியில் இன்று காலை டிபன் பாக்ஸ் குண்டு வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 52 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கேரளா களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று திருச்சூர் காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார்.

அவரிடம் நடந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. யூடியூப் பார்த்து குண்டு தயாரிக்க கற்றுக்கொண்டேன் என கூறிய மார்ட்டின் இதற்காக வெறும் ரூ.3,000 செலவிட்டதாக கூறியுள்ளார். ஜெப கூட்டத்தில் தனது மாமியார் பங்கேற்றும் தனது முடிவில் பின்வாங்கவில்லை என்றார்.