ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் முதல்கட்ட தகவலின்படி இந்த விபத்துக்கு மனித தவறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விசாகப்பட்டினம் – ராயகடா ரயில் சிவப்பு சிக்னலை கவனிக்காமல் ஓட்டுநர் ரயிலை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து காரணமாக இதுவரை 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.