சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் தொடர்ந்து வெறி நாய்கள் தோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் மாடுகளை கடித்து கொல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மேல்சித்தூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான 18 ஆடுகளை தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார்.

இதனிடையே நள்ளிரவு சமயத்தில் தோட்டத்திற்குள் வந்த வெறிநாய்கள் கட்டி போட்டு இருந்த 8 ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. சில ஆடுகள் படுகாயங்களுடன் கத்திக் கொண்டிருந்தது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த பழனியம்மாள் குடும்பத்தினர் ஆடுகளின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கால்நடைத்துறையினருக்கும் வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட விரைந்து வந்தவர்கள் உயிரிழந்த 8 ஆடுகளை அப்புறப்படுத்தியதோடு காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.