கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்தவர் அர்ஜுன் என்கிற சின்னகருப்பசாமி. மதுரையை சேர்ந்த இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அர்ஜுன் என்கிற சின்னகருப்புசாமி தொடர்ந்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அர்ஜுன் என்கிற சின்ன கருப்புசாமி மீது குண்ட தடுப்பு சட்டத்தில் உத்தரவிட்டார்.